கிறிஸ்து தான் எவ்வாறு தனது முழு விருப்பத்தோடு தனது பகைவர்களிடம் சிலுவைச் சாவிற்கு தன்னையே முழுவதுமாகக் கையளித்தார் என்பதையும் அவருடைய இனிமையான பாடுகளின் நிமித்தமாவது நமது உடலை தவறாகப் பயன்படுத்துவதை நாம் கட்டுப்படுத்தவேண்டும் என்றும் கூறுகிறார். |
புத்தகம் 1 - அத்தியாயம் 11 |
நானே விண்ணையும் மண்ணையும் படைத்தேன். எனது உண்மையான உடல் உன்னத பலியாக பலிபீடத்தில் ஒப்புக்கொடுக்கப்படுகிறது. என்னை உன் முழு இதயத்தோடு அன்பு செய் ஏனென்றால் நான் உன்னை அன்பு செய்து உனக்காகவே எனது பகைவர்களின் கைகளில் என்னை முழுமையாக சிலுவைச் சாவிற்கு கையளித்தேன். என் தாய்க்கும் நண்பர்களுக்கும் துயரத்தைக் கொடுத்தேன். எனக்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த ஈட்டியையும் ஆணிகளையும் மற்ற அனைத்து ஆயுதங்களையும் பார்த்தவுடன் என் உள்ளம் துயரத்தின் உச்சத்தில் ஆழ்ந்தது. முள் முடி சூட்டப்பட்ட எனது தலையிலிருந்து உடல் முழுவதும் இரத்தம் வழிந்தோடியபோது எனது பகைவர்கள் என் இதயத்தை பிடிங்கியிருந்தால்கூட அவர்களுக்கு அதைக் கையளித்திருப்பேன். ஏனென்றால் உன்னை நான் இழப்பதைவிட என் இதயத்தை அவர்கள் காயப்படுத்தவும் கையளித்திருப்பேன். எனவே நீ என்னை உன் முழு உள்ளத்தோடு அன்பு செய்யாவிடில் அது உன் நன்றிகெட்ட நிலையைக் குறிக்கும்.
|