காவல் தூதர் ஒருவர் பிரிஜித்தாவிற்காக வேண்டுகிறார். இயேசு அந்த சம்மனசிடம் எதற்காக வேண்டுகிறாய் என்று கேட்கிறார். மேலும் தனது மணமகளுக்கு எது நல்லது என்பதையும் எடுத்துறைக்கின்றார். |
புத்தகம் 1 - அத்தியாயம் 12 |
இயேசுவின் மணமகளான பிரிஜித்தாவின் காவல் தூதர் இயேசுவிடம் வந்து அவளுக்காக மன்றாடினார். அதற்கு இயேசு "ஒரு மனிதன் அடுத்தவருக்காக மன்றாட விரும்பினால் அவரது மீட்புக்காக மன்றாட வேண்டும். நீ எனது வற்றாத அன்பினால் சுடர்விட்டெரியும் அணையாத நெருப்பு. நீ என்னைப் பார்க்கும்போது அனைத்தையும் கண்டுகொள்கிறாய் அவற்றைப்பற்றி தெரிந்துகொள்கிறாய். நீ எனது விருப்பம் எதுவோ அதையே விரும்புகிறாய். எனவே எனது மணமகளுக்கு எது நல்லதோ அதைச் சொல்" என்றார்.
|