மூன்று பேய்களைத் தனக்குள் கொண்டிருந்த தனது பகைவனைப் பற்றியும் அவனுக்கு கொடுக்கப்படும் தீர்ப்பைப்பற்றியும் கிறிஸ்து கூறுகிறார்.
புத்தகம் 1 - அத்தியாயம் 13

ஒருவன் தன்னோடு மூன்று பேய்களைக் கொண்டிருந்தான். ஒரு பேய் அவனுடைய பாலுறுப்புகளிலும் இரண்டாவது அவனுடைய இதயத்திலும் மூன்றாவது அவனுடைய வாயிலும் குடியிருந்தது. முதலாமவன் தனது குதிங்கால் வரையில் நீரை வார்த்துவிட்ட கப்பலோட்டியைப் போன்றவன். அப்படிச் செய்வதால் நீரானது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கப்பல் முழுவதும் நிரம்பும். பிறகு அங்கு வெள்ளப்பெருக்கெடுத்து அந்த கப்பல் கடலில் மூழ்கிவிடும். இங்கே கப்பலானது அவனது உடலையும், நீர் பெறுகுவதைப்போல காம இச்சையானது அவனுக்குள் குடியிருக்கும் பேயால் புயலைப்போல தூண்டிவிடப்படுவதையும் குறிக்கிறது. காம இச்சையானது அவனது குதிங்கால் வரை நுழைந்து பின் அவனது கெட்ட சிந்தனைகளால் மட்டற்ற மகிழ்ச்சி தரும் ஒன்றாக மாறுகிறது. அவற்றைக் எதிர்கொள்ள அவன் தவ முயற்சிகளை மேற்கொள்ளாததாலும், சுத்தபோசனம் செய்து அவற்றை கட்டுப்படுத்தத் தவறுவதாலும் நீர் பெறுகுவதைப்போல அவனது காம இச்சையானது நாளுக்கு நாள் அதிகரித்து அவனது உள்ளத்தைப் பாதிக்கிறது. நீர் பெருக்கெடுத்து அந்தக் கப்பல் மூழ்குவதைப்போல காமத்தில் மூழ்கி மீட்பு என்னும் துறைமுகத்தை அவன் அடைய முடிவதில்லை.

இதயத்தில் வசிக்கும் இரண்டாமவன் ஆப்பில் பழத்திலுள்ள புழுவைப்போன்றவன். அந்தப் புழு முதலில் ஆப்பில் பழத்தின் அடிவாரத்தை சாப்பிட்டுவிட்டு அங்கு தனது சாணத்தை விட்டுச்செல்லும். பிறகு அந்தப்பழம் முழுவதுமாகப் பாழாகும் வரை அதன் அனைத்துப் பகுதிகளையும் ஊடுறுவும். இதைப்போலவே அந்தப் பேயும் முதலில் மனிதனின் நல்ல விருப்பங்களையும், மனதிற்கு திடமளிக்கும் நல்ல ஆசைகளையும் பாழாக்குகிறது. இதனால் அவனது இதயத்தில் நன்மைக்கே இடமில்லாமல் போகிறது. பிறகு அம் மனிதனின் இதயத்தில் அவன் அதிகமாக அன்பு செய்பவற்றையும் உலக ஆசைகளையும் திணிக்கிறது. இதனால் இத்தகைய சிற்றின்பத்திற்காக அவனது உடலை ஈடுபடுத்தச் செய்கிறது. எனவே அவனை உற்சாகமிழந்தவனாய், எதையும் எளிதில் புரிந்துகொண்டு செயல்பட இயலாதவனாய் மாற்றி அவனது வாழ்க்கையை சோர்வடையச் செய்கிறது. இப்போது இம்மனிதன் அடிவாரத்தை இழந்த ஆப்பில் பழத்திற்கு ஒப்பானவன். இதயமில்லாதவன். அவனது இதயத்தில் நன்மைத்தனம் இல்லாததால் இதயமற்றவனைப்போலவே எனது கோவிலுக்குள் நுழைகிறான்.

மூன்றாமவன் எச்சரிகை இல்லாமல் அலைந்து திரிபவற்றை அம்பெய்து பிடிக்க ஜன்னல் வழியாக காத்திருக்கும் வேட்டைக்காரனைப் போன்றவன். தன்னுடைய ஒவ்வொரு பேச்சிலும் சாத்தானுக்குச் சாதகமானவற்றை பேசும் ஒருவனிடம் எப்படி சாத்தான் இல்லாமல் போவான்? நமக்குப் பிடித்தவற்றை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வதில்லையா? தீய வார்த்தைகளைப் பேசி அடுத்தவரின் மனதைக் காயப்படுத்தும்போதெல்லாம் அங்கு சாத்தான் இருக்கிறான். இப்படிப்பட்ட மனிதர்களை, அணையா நெருப்பிலும் கொதிக்கும் கந்தகத்திலும் தள்ளப்பட்டும் விபச்சாரியைப்போலவும், தனது அங்கங்கள் துண்டிக்கப்பட்டு வேதனைக்குட்படுத்தப்படும் நயவஞ்சகமுள்ள துரோகியைப்போலவும், தனது அரசரைப் பரிகாசம் செய்ததற்காக நிலையான அவமானத்திற்குள்ளாகும் குடிமகனைப்போலவும் தண்டிப்பேன் என்று உண்மையும் சத்தியமுமான நான் உறுதியாகக் கூறுகிறேன்.

ஆயினும் அவனுடைய ஆன்மாவும் உடலும் ஒன்றித்து என்னை நோக்கி மன்றாடினால் எனது இரக்கத்தை அவனுக்கு திறந்து கொடுப்பேன். அவன் தீய வார்த்தைகள் பேசுவதை ஒழித்து, தன்னைப் பழிப்பவர்களைப் பற்றி கவலைப்படாமலும் தன்னை மற்றவர்கள் புகழ வேண்டும் என்ற ஆசையில்லாமலும் திருப்பலியில் கலந்துகொண்டால் நான் அவனைத் தேடி வருவேன்.

விரிவுரை
திருச்சபையால் விலக்கிவைக்கப்பட்ட ஒருவரது இறுதிச் சடங்கிற்கான செபத்தை குருவானவர் சொல்லிக்கொண்டிருந்த வேளையில் பிரிஜித்தம்மாள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, “இந்த குரு தனது அதிகாரத்தைக்கொண்டு இந்த மனிதரை அடக்கம் செய்தார். இந்த அடக்கத்திற்குப்பின் இக் குருவானவர் அடக்கம் செய்யப்படுவார் என்பது நிச்சயம். ஏனென்றால் பாரபட்சம் பார்க்கக்கூடாது, தவறிழைத்த பணக்காரர்களுக்கு பெருமை சாற்றக் கூடாது என்று கற்பித்த பிதாவிற்கு எதிராக பாவம் செய்துள்ளார் என்று கூறக்கேட்டார்.

"அழிந்துபோகக்கூடிய சிறிய இலாபத்திற்காக இந்த குருவானவர் தகுதியற்ற ஒரு மனிதரை பெருமைப்படுத்தி, தகுதியுள்ளவர்களுக்கு மத்தியில் அடக்கம் செய்துள்ளார்.  இப்படி இவர் செய்திருக்கக்கூடாது.  தீயவனை நல்லவருக்கு பக்கத்தில் புதைத்து உண்மையும், நன்மையுமான எனது ஆன்மாவிற்கு எதிராக பாவம்  செய்துள்ளார். "என்னை மறுதலித்தவர்களை இறுதி நாளில் நானும் மறுதலிப்பேன்" என்று சொன்னதும் நான் தானே.  இவர் எனது திருச்சபையும், திருச்சபைத் தலைவரும் விலக்கிவைத்த ஒருவரை பெருமைப்படுத்தியுள்ளார்" என்று இயேசு கூறினார். தன்னைப்பற்றி இயேசு இவ்வாறு கூறியதைக் கேள்வியுற்ற குருவானவர் மிகவும் மனம் வருந்தி, நான்காம் நாள் மறித்தார்.


      ⇨