மகிமைக்குறிய கன்னித்தாய் மரியாள் தமது மகள் பிரிஜிட்டா எப்படி உடை மற்றும் ஆபரணங்களை அணிந்துகொள்ள வேண்டும் என்றும் எவ்வகையான உடைகளையும் அணிகலன்களையும் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியவை.
புத்தகம் 1 - அதிகாரம் 7

மரியாள் என்ற நானே கடவுளின் மகனும் உண்மையான கடவுளும் மனிதனுமானவருக்கு பிறப்பு கொடுத்தவள். நானே வானதூதர்களின் அரசி. என் மகன் உன்னை தமது முழு இதயத்தோடு அன்பு செய்கின்றார. நீயும் அவரை அன்பு செய்! எனவே மிகவும் தூய்மையான உடைகளை நீ அணிந்துகொள்ள வேண்டும் அவை எப்படிப்பட்டவை என்றும் அவற்றை நீ எவ்வாறு அணிந்துகொள்ள வேண்டுமென்றும் நான் கூறுகிறேன். நீ எவ்வாறு உள்ளாடை மேலாடை காலணி முக்காடு மற்றும் மேலாடையில் அழகிற்காக அணியும் புரூச்பின் ஆகியவற்றை அணிந்து கொள்கிறாயோ அதேபோல ஆன்மீக ஆடைகளையும் கட்டாயமாக அணிந்து கொள்ளவேண்டும்.

உள்ளாடை என்பது பாவங்களுக்காக மனம் வருந்துவதைக் குறிக்கிறது. உள்ளாடை உடம்போடு ஒட்டிக்கொண்டிருப்பதைப்போல மனம் வருந்துவதும் ஒப்புறவு (பாவசங்கீர்த்தனம்) செய்து மனமாற்றம் பெறுவதும் கடவுளோடு இணைவதற்கான வழிகளாகும். இதன் மூலமாக பாவத்திலிருந்து உனது உள்ளம் தூய்மைப் படுத்தப்படுகிறது.

பாவம் செய்த உடலுறுப்புக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இரண்டு காலணிகள் இரண்டு காரியங்களைக் குறிக்கின்றன ஒன்று தவறான பாதையில் போகாமல் தன்னைத் திருத்திக்கொள்ளத் துடிக்கும் மனதையும் மற்றொன்று தீமைகளை விட்டுவிட்டு நற்செயல்களில் ஈடுபடத் தூண்டும் மனத்தையும் குறிக்கின்றது. கடவுளின் மீது வைத்துள்ள நம்பிக்கையே உனது மேலாடையாகும்.

மேலாடையில் இரண்டு கைகள் இருப்பதுபோல உனது நம்பிக்கையானது நீதியோடும் இரக்கத்தோடும் திகழ வேண்டும். இவ்வாறாக நீ கடவுளின் இரக்கத்தை நம்புவதால் அவரது நீதியை புறக்கணியாதிருப்பாய். கடவுளின் நீதியையும் அவரது நீதித் தீர்ப்பையும் நினைவில் கொள் ஏனெனில் அவர் இரக்கமின்றி நீதி வழங்குவதில்லை நீதியற்ற இரக்கமும் அவரிடம் இல்லை.

விசுவாசமே நீ அணியும் முக்காடு. முக்காடு உனது உடலை மூடிக்கொள்கிறது. முக்காட்டிற்குள் உன் உடல் மூடப்படுகிறது. அதுபோலவே மனித இயல்பு விசுவாசத்தை ஆதாரமாகக் கொண்டது அதன் மூலமே அனைத்தையும் பெற்றுக்கொள்கிறது. விசுவாசம் என்ற முக்காடு உனது மணவாளரின் அடையாளங்களான அவரது அன்பு அவர உன்னைப் படைத்த விதம் அவர உன்னை மீட்ட விதம் அவர் உன்னை தேற்றிய விதம் அவரது ஆன்மாவை உனக்குக் கொடுத்த விதம் மற்றும் அவர உனது ஆன்மீகக் கண்களை திறந்த விதம் ஆகியவற்றை ஆபரணங்களாக அணிந்து கொள்ளவேண்டும்.

அவரது பாடுகளின் நினைவுகளே உனது மேலாடையில் அணிந்து கொள்ளும் புரூச்பின் ஆகும். அவர நிந்திக்கப்பட்டதையம் சிலுவையின் அடியில் அவமானத்துடன் நின்றதையும் உடம்பெல்லாம் இரத்தம் வழிய அவரது சதைகள் கிழிக்கப்பட்டதையும் அவர் தமது ஆவியை தந்தையாம் கடவுளிடம் ஒப்படைத்ததையும் உனது மார்பில் நன்றாகப் பதித்துக் கொள். இந்த அழகிய அணிகலன் உனது மார்பின் மீது எப்போதும் இருக்கட்டும்! உனது தலையில் கற்பு என்னும் கிரீடத்தை அணிந்து கொள்.

மீண்டும் மாசுபடுவதைவிட கசையடியை சகித்துக்கொள்ளும் மனது மேலானது. உனது அன்பு தூய்மையானதாக இருக்கவேண்டும். நீ தாழ்ச்சியாகவும் தகுதியுள்ளவளாகவும் இருக்க வேண்டும். எதைப் பற்றியும் நினையாமல் உனது கடவுளை உன்னைப் படைத்த கடவுளை மட்டுமே நினைவில் கொள். நீ அவரை அடைந்திருப்பது அனைத்தையும் அடைந்திருப்பதற்குச் சமமாகும். இவ்வாறு உனது ஆன்மீக ஆடைகளை அணிந்துகொண்டு உனது மணவாளருக்காக காத்திரு.