நானே உன்னைப் படைத்தவர், உனக்கு மீட்பு அளித்தவர். ஏன் எனது வார்த்தைகளின் மேல் அச்சம் கொண்டாய்? இவ்வார்த்தைகள் எங்கிருந்து வருகின்றன? நல்ல ஆவியிடமிருந்தா அல்லது தீய ஆவியிடமிருந்தா, என்று எண்ணி கலங்குவது ஏன்? நான் கூறும் வார்த்தைகள் உனது மனச்சாட்சி ஏற்றுக்கொள்ளாத அளவிற்கு இருந்தனவா? பதில் சொல்! காரணமில்லாமல் உன்னை நான் எதையும் செய்யுமாறு கட்டளையிட்டேனா?
இதற்கு மணமகளின் பதில் – “இல்லை ஆண்டவரே, அவை அனைத்தும் உண்மையானவை, நான் தான் தவறாகப் புரிந்துகொண்டேன்”. அதற்கு மணமகனாகிய இயேசு – “மூன்று செயல்களைச் செய்யுமாறு நான் உனக்கு கட்டளையிட்டேன். அதிலிருந்து இந்த வார்த்தைகள் நல்வரிடமிருந்து வருவன என்றும், நற்குணம் பொருந்தியவை என்றும் உணர்ந்து கொள். உன்னைப் படைத்து, உனக்கு வேண்டியவை அனைத்தையும் கொடுத்த கடவுளை நீ போற்ற வேண்டும் என்று கட்டளையிட்டேன். மற்ற அனைத்தையும்விட என்னை அதிகமாக போற்றவேண்டும் என்று உனது மனச்சாட்சியும் சொல்கறதல்லவா?
இரண்டாவதாக, என்னையன்றி எதுவும் படைக்கப்படவில்லை, மேலும் என்னையன்றி எதையும் உருவாக்கிட இயலாது என்ற சத்தியத்தின்மீது உண்மையான விசுவாசம் கொள்ளுமாறு கட்டளையிட்டேன். மேலும், உலகக் காரியங்களின் மீதுள்ள ஆசை அளவேடு இருக்கவேண்டும் என்று பணித்தேன். ஏனென்றால், உலகம் மனிதனுக்காகவும், அவனது உபயோகத்திற்காகவும் படைக்கப்பட்டது. அதேபோல, மேற்கூறியவற்றிற்கு எதிர்மறையான மூன்று காரியங்களின் மூலமாக அவை தீய ஆவியிடமிருந்து வருவன என்று புரிந்துகொள்.
சாத்தான் உன்னை தற்பெருமை கொண்டவனாகவும், உனக்கு கொடுக்கபட;்டுள்ள அனைத்திற்காகவும் அகந்தையோடு நீ வாழவும், உனது விசுவாசத்தை மறுதலிக்குமாறும் தூண்டுகிறான். உனது சிந்தனையும் உடலும் தீமையால் நிறைந்து, உன் உள்ளம் தீயனவற்றிற்காக ஏங்கி, பற்றி எரியவேண்டும் என தூண்டுகிறான். சில நேரங்களில், நல்லவனைப்போல நடித்து உன்னை ஏமாற்றுகிறான், ஆகவே, உனது மனச்சாட்சியைக்கொண்டு எதையும் ஆராய வேண்டும் என்று கட்டளையிட்டேன். மேலும், நடப்பவற்றை உனது ஆன்மீக குருவிடம் மறைக்காமல் கூறி அவரது ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினேன்.
எனவே, கடவுளுடைய தூய்மையான ஆவியே உன்னோடு இருக்கின்றது என்பதில் சந்தேசம் கொள்ளாதே. இவை அனைத்தும் கடவுள் உன் மீது கொண்டுள்ள அன்பினாலும் நீ மற்ற அனைத்தையிம்விட கடவுளை விரும்புசறதாலுமே நடக்கின்றன. நான் மட்டுமே இப்படிச் செய்ய இயலும். சாத்தான் உன்னருகில் வர இயலாது. மேலும், மனிதர்களது பாவங்களின் பொருட்டு, எனக்கு மட்டுமே உரித்தான சில இரகசியங்களுக்காக நானே அவனை அனுமதித்தாலன்றி, அவன் உன்னைத் தீயோரின் அருகில் கொண்டுசெல்ல இயலாது. ஏனென்றால், உன்னைப் படைத்ததைப்போலவே அவனையும் படைத்தேன். படைப்பின்போது அவனை நல்லவனாகவே படைத்தேன். ஆனால், அவனது சுய சூழ்ச்சியால் தீயோனாக மாறினான். அவன் மீதும் அதிகாரம் செலுத்தும் ஆண்டவர் நானே.
எனவே, எனக்காக மிகுந்த பக்தியோடு பணிபுரியும் மக்களை பேய் பிடித்தவர்கள் என்று கூறி அவர்கள்மேல் வீண்பழி சுமத்துகிறான். கற்பும், நம்பிக்கையும் கொண்ட தனது மனைவியை விபச்சாரிக்குத் தாரைவார்க்கும் ஒரு மோசமான மனிதனுக்கு ஈடாக என்னை அவன் பழிக்கிறான். என் மீது அன்பு கொண்டவர்களை நான் சாத்தானின் கைகளில் ஒப்படைத்தால, நானும் அப்படிச் செய்ததாகவே ஆகும். ஆனால், நான் விசுவாசமுள்ளவனாக இருப்பதால், எனது அன்புக்குரிய பணியாளர்கள் ஒருவரையும் சாத்தான் தன் வசம் ஈர்த்துக்கொள்ள விடுவதிலை. சில வேளைகளில் என் நண்பர்களின் செயல்களும், எண்ணங்களும் மனச்சாட்சிக்கு விரோதமாக செய்வதைப்போல இருக்கும். அது அவர்கள் சாத்தானால் துன்புறுத்தப்படுவதாலோ, அல்லது. என் மீது கொண்டுள்ள அளவு கடந்த பக்தியாலோ அல்ல. மாறாக, அது அவர்களது மூளையில் ஏற்படும் சிறிய பாதிப்பாகவோ, அல்லது சொல்லக்கூடாத சில காரணங்களுக்காக தங்களைத் தாழ்த்திக் கொள்வதற்காகவோ இருக்கும்.
சில நேரங்களில் எனது நண்பர்களைத் தீண்டுவதற்கான அதிகாரத்தை என்னிடமிருந்து சாத்தான் பெற்றுக்கொள்கிறான். அது அவர்களது மேன்மைக்காகவோ, அல்லது சாத்தான் அவா;களது மனச்சாட்சியில் இருளைப் புகுத்துவதற்காகவோ இருக்கலாம். இருந்தபோதிலும், என் மீது முழு நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டு எனது சித்தமே அவர்களது சித்தமென்று வாழ்வோரை சாத்தான் தன் வசம் ஒருக்காலும் ஈர்த்துக்கொள்ள முடியாது.
|